close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Saturday, January 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் டீசர் உள்பட அனைத்து புரமோஷன்கள் குறித்த தகவல்கள் வெளிவரவுள்ளதாக இயக்குனர் ராஜேஷ் எம் தெரிவித்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 15வது படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படமும் இயக்குனரின் முந்தைய படமான 'இரும்புத்திரை' போலவே ஒரு அழுத்தமான சமூக விழிப்புணர்வு குறித்த் கருத்து டெக்னாலஜி கலந்து கூறப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.