close
Choose your channels

மனைவி, குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் கொண்டாடிய பொங்கல்: வைரல் புகைப்படங்கள்!

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தைத்திங்கள் முதல் நாளான இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர் என்பதும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், சூர்யா, கார்த்தி, உள்பட பல திரையுலக பிரபலங்களும் தாங்கள் பொங்கல் கொண்டாடியது குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ’டான்’ மற்றும் ’அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ’எஸ்.கே.20’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று திரைப்படங்களும் இவ்வாண்டில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.