close
Choose your channels

சிவகார்த்திகேயன் நினைச்சதெல்லாம் உடனே நடக்குதாமே... ஒரு ஆச்சரிய தகவல்

Saturday, December 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் அடுத்து வரும் ’மாவீரன்’ படத்தில் அவர் ஒரு கார்ட்டூனிஸ்டாக நடித்துள்ளதாகவும் அவர் என்ன நினைத்தாரோ அது அப்படியே நடப்பது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

‘மண்டேலா’ என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஸ்டாக நடித்து உள்ளதாகவும் அவர் என்ன நினைத்து கார்ட்டூன் வரைகிறாரோ அது அப்படியே அவருடைய நிஜ வாழ்க்கையில் நடப்பது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அதிதிஷங்கர் பத்திரிகையாளராகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் ‘புஷ்பா’ சுனில், சரிதா ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.