close
Choose your channels

மீண்டும் இணையும் 'நம்ம வீட்டு பிள்ளை' டீம்!

Thursday, January 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. குடும்ப செண்டிமெண்ட், அண்ணன் தங்கை பாசம் ஆகியவை கலந்த இந்த படம் அனைத்து தரப்பினர்களும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இதே கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் பாண்டிராஜ், தான் சிவகார்த்திகேயனுக்காக மீண்டும் ஒரு கதையை தயார் செய்து வருவதாகவும் வருவதாக தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என தெரிகிறது. எனவே சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் மீண்டும் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’தலைவர் 168’, ’தனுஷ் 44’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.