close
Choose your channels

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அவர் அமிதாப்பச்சனுடன் நடித்து வரும் 'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'கபாலி, 'காலா' இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஆம், ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ரஞ்சித்தின் உதவியாளர் ஒருவர் இயக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இந்த படம் குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

ரஞ்சித்தின் தயாரிப்பில் ஏற்கனவே 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.