close
Choose your channels

தீ எரிந்தாலும் எனக்கு கவலையில்லை: டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய ரஜினி நாயகி

Sunday, June 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுஷாந்த்சிங் ராஜ்புத் மறைவு காரணமாக காரசாரமான விவாதங்கள் பாலிவுட் திரையுலகினர் இடையே நடந்து வருகிறது. அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தளத்தில் பாலிவுட் பிரபலங்களை கடுமையாக சாடினார். குறிப்பாக வாரிசு நடிகர் நடிகைகளை அவர் வெளுத்து வாங்கினார். இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கங்கனாவுக்கு மறைமுகமாக பதில் அளிக்கும் வகையில் சோனாக்ஷி சின்கா தனது சமூக வலைத்தளத்தில் ’ஒரு பிரபலம் மரணம் அடைந்த நேரத்தில் அவர் மரணமடைந்த பிரச்சனையை வைத்து விளம்பரம் தேட வேண்டாம் என்றும், அவ்வாறு விளம்பரம் தேடுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும், இந்த நேரத்தில் -எதிர்மறை கருத்து, வெறுப்பு ஆகியவை தேவையற்றது' என்று கூறியுள்ளார்.

நடிகை சோனாக்ஷி சின்காவின் இந்த பதிவு, கங்கனாவை மறைமுக தாக்கும் வகையில் இருப்பதாக காரசாரமான வாக்குவாதங்கள் டுவிட்டரில் நடைபெற்றது. இதனை அடுத்து சோனாக்ஷி சின்கா தனது டுவிட்டர் கணக்கை முடக்கி உள்ளதாக கூறி அதன் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் ’நமது மன ஆரோக்கியத்தை காக்க வேண்டும் என்றால் முதல் படி எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பது தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டுவிட்டரில் தற்போது அதிகமாக எதிர்மறை விஷயங்கள் அதிகமாக இருப்பதால் டுவிட்டரில் இருந்து விலகுகிறேன்’ என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ஸ்கிரீன் ஷாட்டில் ;தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் எனக்கு அதுபற்றி கவலையில்லை’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.