close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' புரொஜக்டை ஆரம்பித்த ரஜினி மகள்: வைரல் புகைப்படங்கள்

Saturday, September 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ’பொன்னியின் செல்வன்’ நாவலை வெப்தொடராக உருவாக்கும் முயற்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி முயற்சித்து வருகிறார் என்று தெரிந்ததே. அதுகுறித்த பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணி தற்போது செயல்வடிவம் பெறும் நிலைக்கு வந்துவிட்டதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு புரோஜக்ட்டும் ஒரு நீண்ட பயணம் என்றும், இந்த நல்ல நாளில் பல்வேறு தடைகளுக்கு பிறகு ’பொன்னியின் செல்வன்’ முதல் அத்தியாயம் ‘புதுவெள்ளம்’ பகுதியை நாங்கள் தொடங்கவுள்ளோம் என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் என்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புரொஜக்ட் குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன.

அமரர் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’நாவலை எந்த அளவுக்கு மணிரத்னம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் காட்சிப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.