close
Choose your channels

101 முதியவர்களுக்காக 'பாகுபலி 2' சிறப்புக்காட்சி. ஏ.ஆர்.ரெஹானா ஏற்பாடு

Wednesday, May 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்பட பலர் நடித்த 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகவுள்ளதை அடுத்து இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் இதுவரை சுமார் ரூ.1300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படமே பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா நல்லெண்ண தூதராக பொறுப்பு வகிக்கும் இளைஞர் சமூக அமைப்பு ஒன்று, முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் வகையில் இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் 'ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள 101 முதியோர்களுக்காக அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 13ஆம் தேதி சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.