ஜீயரின் ஒன்றரை நாள் உண்ணாவிரதம் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

  • IndiaGlitz, [Friday,February 09 2018]

ஆண்டாள் குறித்து கவியரசு வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்

ஜீயர் தன்னுடைய உண்ணாவிரத்ததை கைவிட வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நேரில் சென்று ஜீயரை வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஒன்றரை நாளாக உண்ணாவிரதம் இருந்த ஜீயரின் உடல் நலிவுற்றதாலும், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர்களின் வேண்டுகோளின்படியும் ராமானுஜ ஜீயர் தனது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய எஸ்.வி.சேகர், 'வருத்தம் தெரிவிப்பதற்கும் மன்னிப்பு கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாதவராக வைரமுத்து இருக்க முடியாது. அவர் மன்னிப்பு கேட்பதால் அவரது உயரம் என்ன குறைந்துவிடவா போகிறது? என்று கூறினார்.

More News

மணிரத்னம் படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

சிம்பு, விஜய்சேதுபதி உள்பட மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

புதியதாக அறிமுகமாகும் டிவிக்கு மாப்பிள்ளையாகிறார் ஆர்யா

இந்தியின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ஸ் டிவி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த டிவி வரும் 19ஆம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.

அன்புச்செழியன் முன்னிலையில் 'திமிர் பிடிச்சவன்'

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

பேட்மேன் ரிலீஸ் எதிரொலி: பெண்களுக்கு சத்யம் திரையரங்கின் சிறப்பு சேவை

பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடிப்பில் உருவான 'பேட்மேன்' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பெண்களுக்கு நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்

ரெஜினாவை வாழ்த்தி வழியனுப்பி வைத்த கார்த்திக் படக்குழுவினர்

கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் திரைப்படமான Mr.சந்திரமெளலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்தது என்பது தெரிந்ததே