close
Choose your channels

அன்புச்செழியன் முன்னிலையில் 'திமிர் பிடிச்சவன்'

Friday, February 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் அவர் மீதான நடவடிக்கையும் போலீசாரால் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'திமிறு பிடிச்சவன்' என்ற படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் பைனான்சியர் அன்புச்செழியன் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கணேஷா என்பவர் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பேதுராஜ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'ஒருநாள் கூத்து', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.