close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பட ஹீரோ இவரா? அப்ப மகேஷ்பாபு என்ன ஆச்சு?

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வரும் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த சில முக்கிய தகவல்களை ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் மூன்று முறை சந்தித்து பேசியுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ராஜமெளலி - மகேஷ்பாபு படம் உறுதி என்றும், இந்த படத்தை முடித்துவிட்டு தான் ராஜமெளலி, அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos