close
Choose your channels

தெறி ஸ்டண்ட் காட்சிகளுக்காக விஜய் எடுத்த ரிஸ்க். திலீப் சுப்பராயன்

Tuesday, April 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. சென்னை உள்பட பல முன்னணி நகரங்களில் இந்த படத்தின் முதல் நான்கு நாட்களுக்குரிய டிக்கெட்டுக்களின் முன்பதிவு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும் இந்த படம் குறித்த பரபரப்பான தகவல்களுக்கு பஞ்சமே இல்லாத வகையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.


தற்போது இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். 'தெறி' படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஜய் டூப் இல்லாமல் ரிஸ்ட் எடுத்து நடித்ததாகவும், அனைத்து சண்டைக்காட்சிகளிலும் விஜய் ரியலாக நடித்ததாகவும் கூறினார். குறிப்பாக 100 அடி உயரத்தில் இருந்து விஜய் குதிக்கும் காட்சியில் அவர் டூப் இன்றி நடித்த காட்சியை திரையில் பார்க்கும்போது 'தெறி'யாக இருக்கும் என்று திலீப் சுப்பராயன் கூறியுள்ளார்.

பொதுவாக ஸ்டண்ட் காட்சிகளில் விஜய் டூப் இன்றி ரிஸ்க் எடுத்து நடிப்பது வழக்கமே. இருப்பினும் இந்த படத்தில் அதிகப்படியான ரிஸ்க் எடுத்து அவர் நடித்துள்ளதால் ரசிகர்ளுக்கு ஒரு ஆக்ஷன் விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.