close
Choose your channels

சின்னத்திரை தொகுப்பாளர் தீபக் மனைவி, மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அழகிய புகைப்படங்கள்..!

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் பிரபலமாகியுள்ள தீபக்கின் மனைவி மகனுடன் கூடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் உள்ள நட்சத்திரங்களும் பிரபலமாகி வருகின்றனர் என்பதும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தற்போது மிகப்பெரிய உச்சத்தில் உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகராகவும் இருந்து வருபவர் தீபக். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ’தென்றல்’ என்ற சீரியலில் நடித்திருந்தார் என்பதும் அதனை அடுத்து ’அண்ணி’ ’இறக்கை கட்டிய மனசு’ ’மனைவி’ ’மலர்கள்’ உள்பட பல சீரியல்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறு ’ஜோடி நம்பர் ஒன்’ ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ‘சன் குடும்ப விருதுகள்’, ‘சூப்பர் சேலஞ்ச்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்து உள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர் சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு அக்னித் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபக், மனைவி மற்றும் மகனுடன் உள்ள புகைப்படங்கள் அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.