close
Choose your channels

நள்ளிரவில் திடீரென பிரபல இயக்குனருக்கு போன் போட்ட ரஜினிகாந்த்: என்ன காரணம்?

Tuesday, April 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனருக்கு நள்ளிரவில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் போட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் சீனுராமசாமி என்பதும் ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தில் இருந்து ’மாமனிதன்’ வரை பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’மாமனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசிய போது, ‘நள்ளிரவு 3 மணிக்கு திடீரென எனக்கு ஒரு போன் வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென படத்தை பாராட்டி விட்டு மனம் திறந்து என்னிடம் பேசினார். குறிப்பாக விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பை அவர் பாராட்டினார். நான் அவருக்கு பதிலுக்கு ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன், ‘ரொம்ப தெம்பா இருக்குது சார், நன்றி என்றேன்.

இதை யாரிடம் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த எனது மனைவியை எழுப்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திடீரென ’மாமனிதன்’ படத்தை பாராட்டியதை கூறி செல்போனை காண்பித்தேன் என்று பேசினார். மேலும் இந்த படம் விஜய் சேதுபதி மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இல்லாமல் ’மாமனிதன்’ படம் உருவாகியிருக்காது என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் சீனுராமசாமி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.