close
Choose your channels

ரஜினி-ஷங்கரின் '2.0: இன்று முதல் முக்கிய பணி தொடக்கம்

Saturday, May 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

ரஜினிகாந்த் தனது பகுதியின் டப்பிங் பணிக்காக இன்று காலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை தந்துள்ளார். ரஜினியின் டப்பிங் பணி இன்னும் ஓரிரு நாட்களுக்கு நடைபெறும் என்றும் அதனையடுத்து இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை சுமார் ரூ.450 கோடி செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படமான 'ரஜினி 161' திரைப்படம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. பா.ரஞ்சித் இயக்கவுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். 'கபாலி' இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.