close
Choose your channels

கமல்-சூர்யா இழந்த உண்மையான நட்பு

Monday, March 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் மலையாள திரையுலகை மட்டுமின்றி தமிழ்த்திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இணைந்து நடித்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு உள்பட பலர் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


உலகநாயகன் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், "எனது நண்பர் கலாபவன் மணியின் மரணம் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. எனக்கு இருக்கும் மலையாள சகோதரர்களில் மேலும் ஒருவர் கல்லீரல் பிரச்சனையால் இறந்துவிட்டார். கலைத்துறையில் அதிக திறமை படைத்தவர்களில் ஒருவர் கலாபவன் மணி என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆறு படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கலாபவன் மணியின் மறைவை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் தான் ஒரு அருமையான நண்பரை இழந்துவிட்டதாகவும், அவருடன் இருந்த தருணங்கள் மனதுக்கு நெருக்கமானவை என்றும் அவருடைய ஆத்மா அமைதி பெறட்டும் என்றும் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.