close
Choose your channels

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கடிதம்

Wednesday, January 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் விஷால் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக வெளிவந்த வதந்தியை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இருந்து சமீபத்தில் விலகிய விஷால், தான் என்றுமே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என்றும் விளக்கம் அளித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்
மேலும் ஜல்லிக்கட்டுக்கு தன்னால் முடிந்த ஆக்கபூர்வமான செயலை செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வகையில் தற்போது அவர் பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு ஜல்லிக்கட்டு தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நடிகர் விஷால் அந்த கடிதத்தில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உரிமை என்றும் அதற்கு விதிக்கப்பட்டுல்ள தடையை நீக்க பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து நேரில் பேச தனக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
விஷாலின் கடிதத்திற்கு மதிப்பளித்து பிரதமர் அப்பாய்மெண்ட் தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.