close
Choose your channels

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவுக்கு 4 வேடங்களா?

Friday, June 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது 'என்.ஜி.கே' என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, இந்த படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதிக்குள் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் லண்டனில் பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிகை சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற உறுதி செய்யப்பட்ட செய்தியை சற்றுமுன் பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் சூர்யா நான்கு வேடங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. சூர்யா நான்கு வேடங்களில் நடிக்கின்றாரா? அல்லது நான்கு கெட்டப்புகளில் நடிக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

சூர்யா ஏற்கனவே இரண்டு வேடங்களில் 'வாரணம் ஆயிரம்', 'மாற்றான்', 'மாஸ்' போன்ற படங்களிலும், மூன்று வேடங்களில் '24' படத்திலும் நடித்துள்ளார். நான்கு வேடங்களில் நடிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மையானால் 'மைக்கேல் மதன காமராஜன்' கமலுக்கு பின்னர் நான்கு வேடங்களில் நடிக்கும் முன்னணி நடிகர் என்ற பெருமையை சூர்யா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.