close
Choose your channels

திருமண நாளை கொண்டாடும் சூர்யா பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் பேவரிட் ஹீரோயினாக இருந்தவர் நடிகை பூமிகா. இவர் தனது 14 ஆவது திருமண தினத்தை நேற்றுக் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து உருக்கமான கருத்து ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பத்ரி“ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான “ரோஜா கூட்டம்“ திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கு பேவரிட் ஹீரோயின் எனச் சொல்லும் அளவிற்கும் பாராட்டப் பெற்றார்.

அதேபோல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “ஜில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார். இதனால் பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வேறுமொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகா சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். சமீபத்தில் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் தற்போது “கண்ணை நம்பாதே“ எனும் தமிழ் திரைப்படம் உள்ளிட்ட 5 படங்களில் நடித்துவருகிறார்.

தற்போது 14 ஆவது திருமண தினத்தை கொண்டாடிய நடிகை பூமிகா, “திருமணம் செய்துகொண்டு 14 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். சிரிப்பு, கண்ணீர் என எங்களது வாழ்நாள் கழிந்திருக்கிறது. ஆனாலும் தொழில் ரீதியாக இன்னும் ஒன்றாக கற்றுக் கொள்கிறோம். கனவு காணவும், இலக்கை அடையவும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் எங்களால் முடிகிறது” எனப் பதிவிட்டு உள்ளார். நடிகை பூமிகாவின் இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.