close
Choose your channels

ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்: சத்தமின்றி சூர்யா செய்த உதவி!

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000 மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்தளவிற்கு ஏழை மக்களின் பசியை போக்கி வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர் சூர்யா சத்தமின்றி வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ள தகவல் வெளிவந்துள்ளது. நேற்று மட்டும் 250 சூர்யா ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தனது படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனது படங்களை வெற்றியடையச் செய்யும் ரசிகர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்யும் வகையில் சூர்யா அனுப்பிய பணம் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை மற்ற மாஸ் நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.