close
Choose your channels

கொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ

Saturday, March 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக் கூடாது என்ற கட்டுப்பாடும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி கிராமங்களில் உள்ள சில தன்னார்வ இளைஞர்கள் பலர் தங்கள் கிராமத்தை சுற்றி கிருமிநாசினியை கிராம மக்களின் நலனை முன்னிட்டு தெளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்பட ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விமல் தனது சொந்த கிராமமான திருச்சி மாவட்டத்தில் உள்ள பன்னாங்கொம்பு என்ற பகுதியில் தன்னார்வ இளைஞர்கள் சிலருடன் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தன் சொந்த கிராமத்து இளைஞர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு கிருமிநாசினியை நடிகர் விமல் தெளிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.