close
Choose your channels

கவர்னரை சந்தித்த திரையுலக பிரபலங்கள்: காரணம் என்ன?

Wednesday, May 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் சென்னையில் மெளன அறப்போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று திரையுலக பிரபலங்கள் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க செயலாளர் விஷால், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், உள்பட பலர் இருந்தனர். மேலும் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திரைத்துறை சார்பில் பெறப்பட்ட கையெழுத்து மனுவை கவர்னரிடம் வழங்கினர்

கவர்னரின் சந்திப்புக்கு பின்னர் நடிகர் சங்க தலைவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் இரண்டு வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்ததாக கூறினார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.