close
Choose your channels

பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை: என்ன காரணம்?

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மகள் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ ’பிசாசு’ ’சார்பட்டா பரம்பரை’ உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலன். இவரது மகள் தூரிகை திடீரென நேற்று இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 28.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட தூரிகை பிரபல ஆங்கில ஊடகத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பதும் அவரே இணையத்தில் ஒரு சொந்த இதழை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல திரைப்படங்களில் அவர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.