close
Choose your channels

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆணையம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விரைவான நடவடிக்கை!!!

Monday, December 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆணையம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விரைவான நடவடிக்கை!!!

 

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பிற்காக ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த ஆணையம் ஓய்வுப்பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதி வாரியான புள்ளி விபரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க குலசேகரன் தலைமையிலான ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் கணக்கெடுப்பு தொடங்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தக்கோரி பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதாலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69% இடஒதுக்கீடு வழக்கிற்கு சாதி வாரியான புள்ளி விவரங்கள் தேவை படுவதாலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதற்கென ஆணையம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கு கருணாஸ் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்த நிலையில் தற்போது நீதிபதி குலசேகரன் தலைமையில் முதல்வர் ஆணையம் அமைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.