close
Choose your channels

முட்டாள்கள் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, லண்டனிலும் உள்ளனர்: எஸ்வி சேகர்

Friday, February 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்த பின்னரே இந்த போராட்டம் உலகின் கவனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா மற்றும் நடிகை மியா கலீஃபா ஆகியோர் குரல் கொடுத்த பின்னரே இந்த பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் ட்விட்டரில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விடுகின்றனர். அதேபோல் சர்வதேச பிரபலங்களுக்கு ஆதரவாகவும் நம்மூர் பிரபலங்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் அவர்கள் சர்வதேச பிரபலங்கள் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கூறிய கருத்துக்கு கூறியதாவது:

பிரபலத்தை வர்த்தகம் செய்யும் முட்டாள்கள் மற்றும் அறிவற்றவர்கள் நம் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா லண்டன் போன்ற நாடுகளிலும் உள்ளனர். இந்திய ஜனநாயக அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதை நிறுத்துவதே அவர்களுக்கு நல்லது.

வழக்கம்போல் எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.