close
Choose your channels

தமிழிசையின் 'மெர்சல்' ஜிஎஸ்டி கருத்துக்கு திருமாவளவன் பதில்

Thursday, October 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் கடைசி காட்சியில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், இந்த வசனங்கள் நீக்கப்படாவிட்டால் வழக்கு தொடரவுள்ளதாகவும் எச்சரித்தார். சென்சார் போர்டு அனுமதித்த ஒரு வசனத்தை ஒரு கட்சியின் தலைவர் நீக்க சொல்வது சரியா? என்பது குறித்த செய்தியை சற்றுமுன்னர் நாம் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு தமிழிசை செளந்திரராஜன் விடுத்த எச்சரிக்கைக்கு இதுவரை 'மெர்சல்' குழுவினர் பதில் அளிக்காத நிலையில் இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, 'மெர்சல்' பட விவகாரத்தில் படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழுவைத்தான் தமிழிசை குற்றம்சாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை குறை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.