close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் ஸ்பாட்: த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் வைரல்!

Wednesday, September 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அஹில்யா கோட்டை என்ற பகுதியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த நதிக்கரை ஒன்றில் காதல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்ததை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். 

இதனை அடுத்து தற்போது அவரும் அஹில்யா கோட்டையில் நடக்கும் படப்பிடிப்பு கொடுத்த சூட்டிங் ஸ்பாட் இடங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் அவர் வந்தியதேவன் கேரக்டரில் நடித்து வரும் கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.