close
Choose your channels

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தமிழ் நடிகைகள்: மூவர் கைது

Saturday, June 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரண்டு தமிழ் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டு கொண்டிருக்கிறது குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் படப்பிடிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சினிமாவை நம்பி வாழும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட பலரும் வருமானமின்றி வறுமையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மும்பையிலுள்ள தானே என்ற பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து வாடிக்கையாளர் போன்று போலீஸார் மாறு வேஷம் போட்டு அந்த பகுதியில் சோதனை செய்தபோது விபச்சாரம் நடப்பது உறுதி செய்ய பட்டது. இதனையடுத்து போலீசார் அதிரடியாக அந்த அபார்ட்மெண்ட் முழுவதும் சோதனை நடத்தியதில் இரண்டு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது

விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் தமிழ் நடிகைகள் என்றும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு தமிழ் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.