close
Choose your channels

36 நாட்கள், சிங்கிள் ஷெட்யூல்: முடிந்தது சூர்யாவின் அடுத்த படம்

Tuesday, October 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சூர்யா திறமையான நடிகராக இருப்பது மட்டுமின்றி சினிமாவில் உள்ள திறமையான இளைஞர்களுக்கும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்து வருவது தெரிந்ததே.

அந்த வகையில் 'உறியடி' படம் மூலம் தமிழ் சினிமாவுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் விஜய்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் சூர்யா. ஆம், சூர்யாவின் தயாரிப்பில் விஜயகுமார் இயக்கத்தில் 'உறியடி 2' திரைப்படம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் ஒரே ஷெட்யூலில் 36 நாட்களில் முடிந்துவிட்டது. இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.