close
Choose your channels

மாரி செல்வராஜ் படத்தில் முதல்முறையாக வடிவேலு: ஹீரோ யார் தெரியுமா?

Monday, November 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரிசெல்வராஜ் அதனை அடுத்து தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது மேற்கண்ட இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும். அதேபோல் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி உதயநிதி - மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் முறையாக மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.