close
Choose your channels

கொரோனா நிவாரண நிதியாக கவியரசு வைரமுத்து கொடுத்த தொகை!

Saturday, May 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் பொதுமக்கள் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார்

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடியே, அஜித் 25 லட்சம், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி, ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் என பலர் நிதி உதவி செய்து வருவது குறித்த செய்திகளை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கவியரசு வைரமுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் அளித்துள்ளார். நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக வைரமுத்து அளித்து உள்ளார். அதேபோல் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் அவர்கள் ஒரு லட்சம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.