close
Choose your channels

வனிதாவுக்குள்ளும் இவ்வளவு சோகமா? 

Friday, June 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக செண்டிமெண்ட் மழை பொழிந்து வருகிறது. ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா, அபிராமி உள்பட பலரும் தங்கள் சொந்தக்கதை சோகக்கதையை விவரித்த நிலையில் இன்று வனிதா தனது சோகக்கதையை கூறுகிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் தனது மகன் விஜய் ஸ்ரீஹரி பிறந்த நாள் என்றும், தனக்கு யாருமே இல்லாத நிலையில், யாரும் ஆதரவு தராத நிலையில் தனது மகன் மட்டுமே நம்பிக்கை அளித்ததாகவும் கண்ணீர்மல்க கூறுகிறார். கல்லுக்குள் ஈரம் இருப்பது இன்றைய புரமோவில் இருந்து தெரிய வருவதாக கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது

இதுவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறும் கதையை கேட்கும் மற்ற போட்டியாளர்களின் ரியாக்சன்களுக்கும் லாஸ்லியாவின் ரியாக்சனுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. சோகக்கதையை கேட்கும் போதெல்லாம் மற்றவர்கள் கண்ணீர்விட்டு தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கும்போது லாஸ்லியா மட்டும் ஒரு ஆழமான அமைதியான பார்வையை மட்டும் வெளிப்படுத்தி வருகிறார். அவரது சோகக்கதையை எப்போது? என்பது பிக்பாஸ் திரைக்கதை ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே அதுவரை பொறுமை காப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.