close
Choose your channels

விஜய்-அஜித்தை வைத்து பான் - இந்தியா திரைப்படம்: கங்கை அமரன் சொன்னது உண்மையா?

Tuesday, June 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் - அஜித் இணைந்து நடிக்கும் பான் - இந்தியா திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அவருடைய தந்தை கங்கை அமரன் கூறியதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இருவரும் தாங்கள் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு இணைய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், அஜித் - விஜய் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இது குறித்து வெங்கட் பிரபுவிடம் விளக்கம் கேட்டபோது ’அது முழுக்க முழுக்க வதந்தி என்றும், தான் தற்போது நாகசைதன்யா நடிக்கும் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் விஜய் - அஜித் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை இயக்க பொருத்தமான இயக்குனர் வெங்கட்பிரபு மட்டுமே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos