close
Choose your channels

சர்வதேச மகளிர் தினம்: நயன் குறித்து விக்னேஷ் சிவன் கூறியது என்ன தெரியுமா?

Tuesday, March 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் பெருமை குறித்தும், பெண்களின் அத்தியாவசியம் குறித்தும், பெண்களுக்கு தரவேண்டிய மரியாதை மற்றும் கௌரவம் குறித்தும் பல உலக தலைவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நம் வாழ்வில் அனைத்துமே பெண்கள் தான். பெண்கள் தான் நம்மை உருவாக்குகிறார்கள், நாம் நமது வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள், நம்முடைய வாழ்க்கைக்கும் நாம் செய்யும் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் தருபவர்கள் பெண்கள் தான்.

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் பெண்களின் தினம் தான். எனவே ஒவ்வொரு பெண் இருக்கும் இடத்தையும் ஒரு அழகான இடமாக மாற்றுவோம். தைரியமான, அழகான, வலிமையான மற்றும் அற்புதமான பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.