close
Choose your channels

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பா? தமிழக அரசியலுக்கு ஸ்கெட்சா?

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் சமூக வலைதளங்களில் கசிந்து வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .

பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் ஆகியோர்களை வெற்றி பெற வைத்து பதவியில் உட்கார வைத்தவர் தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் என்று கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் உள்ளாட்சி தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை போட்டியிட அனுமதித்த நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியலில் நேரடியாக குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நடந்ததாகவும் அந்த சந்திப்பின் போது தமிழக அரசியலில் நுழைவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இப்படி ஒரு சந்திப்பு நடைபெறவே இல்லை என்றும் இது குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.