close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த விஜய் பட இயக்குனர்!

Saturday, September 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 51 நாட்களாக காரைக்குடியில் நடைபெற்றது என்பதும் சமீபத்தில்தான் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய் பட இயக்குனர் ஒருவர் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு விஜய் நடித்த ’புதிய கீதை’ என்ற திரைப்படத்தை இயக்கிய கேபி ஜெகன் அதன்பின்னர் கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கினார். அதன் பின்னர் ’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடித்த கேபி ஜெகன், தற்போது சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.