close
Choose your channels

விஜய்யின் 'புலி' பட விவகார வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘புலி’ படத்துக்காக அவர் பெற்ற சம்பளத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தில் அவர் 15 கோடி ரூபாய் வாங்கிய சம்பளத்தை மறைத்ததாக வருமான வரித்துறை சமீபத்தில் ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்தது. வருமான வரித்துறையின் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்து 2016 - 17 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் நடிகர் விஜய் செய்தபோது அதில் அவருடைய வருமானம் என 35,42,91,890 என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ‘புலி’ படத்திற்கு சம்பளமாக பெற்ற 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என கண்டறியப்பட்டது. 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததற்காக ஒன்றரை கோடி ரூபாயை அவருக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அபராதம் விதிப்பதாக இருந்தால் 2019 ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டும் என்றும் தாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருமான வரித்துறையின் அபராத உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வருமானவரித்துறை இதற்கு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.