close
Choose your channels

4 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸ்: விஜய்சேதுபதி கவலை?

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவரது நடிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படமும் கிட்டத்தட்ட ஓடிடி ரிலீஸ் என்பது முடிவாகிவிட்டது.

அதுமட்டுமின்றி ’கடைசி விவசாயி’ மற்றும் ‘துக்ளக் தர்பார்’ ஆகிய விஜய்சேதுபதி படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்த படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தான் நடித்த 4 திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆவது விஜய்சேதுபதிக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளதாம். தியேட்டரில் ரிலீஸ் ஆவதையே ரசிகர்கள் விரும்புகின்றன என்பது ஒருபக்கம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களின் அதிருப்தி பட்டியலில் விஜய்சேதுபதி பெயரும் சேர்ந்துவிட்டதற்கும் அவர் கவலை அடைந்துள்ளாராம்.

மேலும் ‘பொன்மகள் வந்தாள்’ தொடங்கி இதுவரை ஓடிடியில் ரிலீஸான எந்த படமும் மக்களின் வரவேற்பை பெறவில்லை என்பதும் விஜய்சேதுபதியின் கவலைக்கு இன்னொரு காரணமாக உள்ளதாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.