close
Choose your channels

ரிலீஸ் ஆகும் முன்பே அதே இயக்குனருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்!

Thursday, May 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரின் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அதே இயக்குனருடன் மீண்டும் இணைய விக்ரம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

’டிமான்டி காலனி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின்னர் ‘இமைக்கா நொடிகள்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. தற்போது விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விக்ரம் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும், இந்த படத்திற்கு ‘மைதானம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

’மைதானம்’ படத்தில் நடித்து முடித்தவுடன் மீண்டும் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்தின் பேச்சுவார்த்தைகளும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.