தந்தை இறப்பு... 17 வயது விராட் கோலி ஆடிய ஆட்டம் குறித்து ஆச்சர்யப்பட்ட சக வீரர்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவரும் விராட் கோலி, இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். ஆனால் 17 வயதில் போட்டிக்கு முன்பு தந்தையின் இறப்பு செய்தி கேட்டுவிட்டு விராட் கோலி களம் இறங்கியது குறித்து அவருடைய நண்பரும் சக வீரருமான இஷாந்த் சர்மா தற்போது பகிர்ந்து கொண்டுள்ள ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் அண்டர் 17 கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விராட் கோலியுடன் ஒன்றாக விளையாடியும் நண்பராகவும் இருந்துவரும் இஷாந்த் சர்மா பகிர்ந்து கொண்டுள்ள கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளராக இருந்துவந்த இஷாந்த் சர்மா கடந்த 2022 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதுவரை 105 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். மேலும் கபில்தேவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் அதேபோல தோனி தலைமை, விராட் கோலி தலைமை என்று மூத்த வீரர்களுக்கு பக்க பலமாக இருந்து வந்தவர்.

தற்போது 34 வயதில் மீண்டும் கம்பேக் கொடுத்து ஐபிஎல் போட்டிகளுக்காக டெல்லி அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பர் விராட் கோலியைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நாங்கள் 17 அண்டர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தோம். அப்போது ஒருநாள் கோலி சோகமாக தனித்து இருந்தார். ஏனென்று கேட்டேன். அருகில் இருந்தவர் அவரது தந்தை இறந்த தகவலைக் கூறினார். இதைக் கேட்டவுடன் எப்படி அந்த நேரத்தை எதிர்கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

ஆனால் தந்தை இறப்பின்போதும் விராட் கோலி களத்தில் இறங்கி டெல்லி அணிக்காக, கர்நாடக அணியை எதிர்த்து அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடினார். 80 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்றே தெரியவில்லை. நானாக இருந்தால் களத்திற்கே சென்றிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஃபிட்னஸ் விஷயத்தில் விராட் கோலி அதிக அக்கறை கொண்டவர். கிரிக்கெட் வீரர்களும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். அவருடைய தலைமையில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் விஷயத்தில் அக்கறை காட்டினர் என்றும் தற்போது ஆன்மிக விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என்றும் விராட் கோலி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் 17 வயதில் தந்தையின் இறப்பு செய்தி கேட்ட பிறகும் போட்டிக் களத்தில் இறங்கி விளையாடிய விராட் கோலியை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

அருள்நிதியின் அடுத்த படத்தில் வில்லனான 'பிகில்', 'பத்து தல' நடிகர்..!

விஜய் நடித்த 'பிகில்' சிம்பு நடித்த 'பத்து தல' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஒருவர் அருள்நிதியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'லியோ'வுக்கு இணையாக 'கங்குவா'வில் ஒரு காட்சி.. வேற லெவல் தகவல்,..!

 விஜய் நடித்து வரும் 'லியோ' மற்றும் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் 'லியோ' படத்தை போலவே 'கங்குவா' படத்தில் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சி

மின்வெட்டு குறித்து ட்விட் போட்ட திரையுலக பிரபலம்.. உடனடியாக பதிலளித்த அமைச்சர்..!

சென்னையில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு குறித்து திரை உலக பிரபலம் ஒருவர் தனது ட்விட்டரில் ட்விட் போட்ட நிலையில் உடனடியாக அதற்கு மின்வாரியத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். 

விஜய் மீது காவல் ஆணையரிடம் திடீரென புகார் அளித்த சமூக ஆர்வலர்.. என்ன காரணம்?

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிய போகிறது 'லியோ' படப்பிடிப்பு.. 'தளபதி 68' தொடங்குவது எப்போது?

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி