close
Choose your channels

அருள்நிதியின் அடுத்த படத்தில் வில்லனான 'பிகில்', 'பத்து தல' நடிகர்..!

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ‘பிகில்’ சிம்பு நடித்த ’பத்து தல’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஒருவர் அருள்நிதியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ’வேட்டை’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் சௌந்தர் ராஜா. இதனை அடுத்து ’ஜிகர்தண்டா’ ’தெறி’ ’றெக்க’ ’சிலுக்குவார் பட்டி சிங்கம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக விஜய் நடித்த ’பிகில்’ சிம்பு நடித்த ’பத்து தல’ திரைப்படத்தில் இவர் அது கேரக்டர் ரசிக்கும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் அருள்நிதி நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் சௌந்தர் ராஜா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என்றும் தனது திரையுலக வாழ்வில் இது தனக்கு ஒரு மிகப்பெரிய படம் என்றும் அவர் தெரிவித்தார்.

அருள்நிதியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் இடுக்கியில் நடைபெற்று வருகிறது. சௌந்தரராஜாவுக்கு இந்த படம் வெளியானவுடன் அதிக படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.