close
Choose your channels

விஜய் மீது காவல் ஆணையரிடம் திடீரென புகார் அளித்த சமூக ஆர்வலர்.. என்ன காரணம்?

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் சிங்கிள் பாடல் ’நா ரெடி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பாடலில் நடிகர் விஜய் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் இருந்ததை அடுத்து ஒரு சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

போதை பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் ’நா ரெடி’ பாடல் உள்ளதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது காவல் துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.