close
Choose your channels

'பேட்ட' படம் குறித்து தமிழக அரசுக்கு விஷால் வைத்த கோரிக்கை

Sunday, January 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. இந்த படம் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிட்டதாகவும், சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன

இந்த நிலையில் 'பேட்ட' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஒருசில இணையதளங்களில் லீக் ஆகியும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பைரசி காப்பி அரசு பேருந்தில் ஒளிபரப்பப்பட்டதாக ஆதாரபூர்வ தகவல் வந்துள்ளது.

கரூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் 'பேட்ட' படத்தின் பைரசி காப்பி ஓடிக்கொண்டிருந்ததாக வீடியோ ஆதாரத்துடன் ரஜினி ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார். இந்த ஆதாரத்தை சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஒருசில தனியார் பேருந்துகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பேருந்துகளிலேயே புதிய படங்கள் ஒளிபரப்பப்படுவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.