close
Choose your channels

திரையரங்க உரிமையாளர்களை குஷிப்படுத்திய 'விஸ்வாசம்' தயாரிப்பாளர்

Saturday, January 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது எந்த அளவுக்கு கஷ்டமோ, அதே அளவு அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் படும் கஷ்டம் அறிந்ததே. ரிலீஸ் ஆகும் சில மணி நேரத்திற்கு முன்பு கூட கேடிஎம் ரிலீஸ் செய்ய முடியாமல் முதல் நாள் முதல் காட்சி ரத்தான சம்பவங்கள் பல நடந்துள்ளது.

இந்த நிலையில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில் இப்போதே தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து கேடிஎம் அனுப்பியாகிவிட்டது. இந்த தகவலை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடைசி நேரத்தில் படத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமா? முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படுமா? என்ற சந்தேகமே எழ வாய்ப்பில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த சுமூகமான நடவடிக்கையால் திரையரங்கு உரிமையாளர்கள் குஷியாகியுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.