close
Choose your channels

'விக்ரம்' படத்தில் அந்த முக்கிய காட்சியை எடுக்க மறந்துவிட்டோம்.. நடிகை காயத்ரி

Monday, September 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’விக்ரம்’ படத்தில் ஒரு முக்கிய காட்சியை எடுக்க மறந்து விட்டோம் என அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 100 நாட்கள் இந்த படம் திரையரங்குகளில் ஓடி சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இதனையடுத்து ’விக்ரம்’ திரைப்படத்தின் 100வது நாளில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தில் பகத் பாசிலின் காதலி கேரக்டரில் நடித்திருந்த காயத்ரி, ’விக்ரம்’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் இறப்பது போல் காட்சி எடுக்கப்பட்டால் அடுத்ததாக கண்விழித்து சிரிப்பது போன்ற ஒரு காட்சியும் கூடுதலாக எடுப்பது வழக்கமானது. ஏனெனில் அந்த நடிகர் உயிருடன் உள்ளார், இறப்பது போல் எடுக்கப்பட்டது நடிப்பு தான் என்பதை உலகிற்கு சொல்வதற்காகவே அவ்வாறு ஒரு காட்சி எடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் ’விக்ரம்’ திரைப்படத்தில் நான் இறந்த காட்சியை படமாக்கியபின், கூடுதலாக நான் சிரிக்கும் காட்சியை எடுக்க மறந்து விட்டோம். காரணம் நேரமில்லை என்பதுதான். இந்த நிலையில் புதுமையாக செய்வதற்காக ஒரு புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டோம். எல்லோரும் உங்கள் தலை எங்கே எனக் கேள்வி கேட்ட நிலையில் அந்த தலை இதோ இருக்கிறது பாருங்கள் என தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.