close
Choose your channels

பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம்: நாடக நடிகர் ஆவேசம்

Tuesday, June 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இருதரப்பினர்களும் நடிகர், நடிகைகளின் வாக்குகளை பெற தீவிர முயற்சியில் உள்ளனர். குறிப்பாக சங்கத்தில் நாடக நடிகர், நடிகைகளின் வாக்குகள் அதிகம் இருப்பதால் அவர்களின் வாக்குகளை பெற இரு அணியினர்களும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் நாடக நடிகர் ஒருவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: பாக்யராஜ் சமீபத்தில் நாடக நடிகர்களிடையே பேசியபோது, ஓட்டு கேட்க வரும்போது ஏழ்மையில் இருக்கும் நாடக நடிகர்களுக்கு ஓரளவு பண உதவி செய்வோம் என்றும் அதன்பின்னர் வெற்றி பெற்று பதவியேற்றவுடன் நாடக நடிகர்களுக்கு பல உதவிகள் செய்வோம் என்று பேசியுள்ளார். நாடக நடிகர்கள் ஓட்டுக்கு காசு வாங்கும் பிச்சைக்காரர் என பாக்யராஜ் கருதி இவ்வாறு பேசியுள்ளார். அவர்தான் எங்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்டு வருகிறார்.

நாடக நடிகர்களை இழிவாக பேசிய பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டி அடிப்போம். அவருக்கு நாடக நடிகர்கள் யாரும் ஓட்டு போடக்கூடாது. அவ்வாறு ஓட்டு போட்டால் அது நாடகத்துறைக்கே செய்யும் துரோகம்' என்று அந்த நாடக நடிகர் ஆவேசமாக பேசியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.