close
Choose your channels

என் நோக்கத்தை மீடியா திரித்துவிட்டது: 'யார் நீங்க" கேள்வி கேட்ட சந்தோஷ்

Friday, June 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் என்ற வாலிபர் 'யார் நீங்க' என்று கேள்வியை கேட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனதோடு #நான்தாப்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் டிரெண்ட்டுக்கு வந்தது.

இந்த நிலையில் பெரும்பாலான ஊடகங்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் ரஜினிக்கு இதுவொரு அவமானம் என்ற வகையில் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் தற்போது சந்தோஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ரஜினிகாந்திடம் 100 நாட்களாக ஏன் வரவில்லை என தான் கேட்ட நோக்கம் வேறு! ரஜினிகாந்த் பதவியில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதர். அவர் கடந்த 100 நாட்களில் ஒருநாள் வந்திருந்தால் எங்கள் போராட்டம் உலக அளவில் சென்று வெற்றி பெற்றிருக்கும் என உரிமையுடன் கேள்வி கேட்டேன்

உண்மை இவ்வாறிருக்க மீடியாக்கள் நான் சொன்னதை தங்கள் போக்கிற்கு தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் வகையில் வேறு மாதிரி செய்தி வெளியிட்டுள்ளனர். இது எனக்கு தனிப்பட்ட முறையில் பாதிக்கின்றது என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.