close
Choose your channels

இந்த வாரம் வெளியேறும் இருவர் இவர்கள்தான்

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போகும் இருவர் யார்? என்பதை அறிந்து கொள்வதில் நமது வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பது அறிந்ததே. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையே அந்த வாரம் வெளியேறும் நபர் யார் என்பதை தவறாமல் கூறி வந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இந்த வாரம் வெளியேறும் இருவர் குறித்த தகவல்கள் சற்றுமுன் வந்துள்ளது.

இதன்படி இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர். இதன்மூலம் மீண்டும் ஒருமுறை ஐஸ்வர்யாவை காப்பாற்றியுள்ள பிக்பாஸ், நினைத்தபடியே அவரை ஃபைனலுக்கு கொண்டு வந்துவிட்டார்.

இனிமேல்தான் ஐஸ்வர்யாவுக்கு உச்சகட்ட பிரச்சனை இருக்கின்றது. முதல் நாள் முதல் யாஷிகாவின் ஆதரவினால் கொட்டமடித்து வந்த ஐஸ்வர்யா முதல்முறையாக தனித்து விடப்படுகிறார். ஏற்கனவே கட்டுக்கடங்காத கோபத்துடன் மனநிலையில் மாற்றம் கொண்டுள்ள ஐஸ்வர்யாவை அவ்வப்போது அணணகட்டி தடுத்த மும்தாஜ், யாஷிகா ஆகியோர் வெளியேறிவிட்டதால் அடுத்து வரும் ஒரு வாரத்தில் ஐஸ்வர்யாவின் நிலைமை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ்ப்பெண்கள் மூவரும் ஐஸ்வர்யாவும் மோதவுள்ள இந்த ஃபைனல் விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.