close
Choose your channels

தோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா? 

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது அவர் வந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்களுக்கும் படு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டியதால் தான் இந்த விபத்து நேர்ந்தது என்பதை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் இந்த விபத்து குறித்து கூறிய போது ’தற்போது யாஷிகா நலமுடன் இருப்பதாகவும் அவரது கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இன்னும் தெரியாது என்றும், மருத்துவர்கள் இது குறித்து அவரிடம் பேச வேண்டாம் என்று கூறி உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். யாஷிகா பவானி குறித்து கேட்டபோது அவர் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லி இருக்கிறோம் என்றும் கூறினார்.

மேலும் சிகிச்சைக்குப்பின் யாஷிகா மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் இரண்டு மாதங்கள் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றும் யாஷிகாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.