close
Choose your channels

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Sunday, December 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விருதுநகர் மாவட்டம் சாத்துரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்ப்பிணிக்குக் ரத்தம் கொடுத்த இளைஞர் கடந்த இரண்டு நாட்களுக்குக் முன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த இளைஞர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மரணம் அடைந்தார். ரத்ததானம் செய்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யாத வாழ வேண்டிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்திருப்பது பெரும் துரதிஷ்டமாக கருதப்படுகிறது.

இந்த இளைஞரிடம் ரத்தம் பெற்ற ரத்ததான அமைப்பு கவனத்துடன் செயல்பட்டிருந்தால் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடூரமும் தவிர்க்கப்பட்டிருக்கும், இந்த இளைஞரின் உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.